பொழுதுபோக்கு

காதலரை பிரிந்த தமன்னா? ரகசிய பதிவால் பரபரப்பு

நீண்ட காலமாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் நடிகை தமன்னா, இதுவரை திருமணம் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் உள்ளார்.

திருமணம் எப்போது என்று பத்திரிகையாளர்கள் கேட்டால், ஏதாவது ஒன்றைச் சொல்லி தட்டிக்கழித்து வருகிறார். விஜய் வர்மாவும் இதுவரை திருமணம் குறித்த எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

காதல் சமாச்சாரம் ஒரு பக்கம் இருந்தாலும் இருவரும் நடிப்பில் படு பிசியாகி உள்ளனர். விஜய் வர்மா பாலிவுட்டில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் மற்றும், வலைத் தொடர்களில் நடித்து வருகிறார்.

ஒருமுறை தமன்னாவிடம் ரொமாண்டிக் காட்சிகளில் நடிக்காத நீங்கள் திடீரென்று இதுபோன்ற படங்களில் நடித்திருக்கிறீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, விஜய் வர்மா என் வருங்கால கணவர், அதனால்தான் அப்படிப்பட்ட காட்சியில் நடித்தேன் என்று போல்டாக கூறினார் தமன்னா.

இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், தற்போது இவர்களைப் பற்றிய ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

அதாவது விஜய் வர்மாவை தமன்னா பிரிந்துவிட்டார் என்ற செய்தி தான் அது. அதற்குக் காரணம் தமன்னா வெளியிட்ட ஒரு பதிவு.

சமீபத்தில் தமன்னா, காதல் முறிவைச் சுட்டிக்காட்டும் வகையில் இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளதாகப் நெட்டிசன்கள் கொளுத்தி போட்டு வருகிறார்கள். தமன்னா தன்னுடைய பதிவில்,

‘காதலை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, எதிரில் உள்ளவர்களுக்கு ரகசிய ஆர்வத்தைக் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவர் உங்களை அழகாகப் பார்க்க வேண்டுமென்றால், முதலில் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அழகாகப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்’ என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார்.

இதனைக் கண்டு அவரது ரசிகர்கள், தமன்னா இப்படி ஒரு பதிவை போட காரணம் என்ன? என்றும் அவரின் காதலில் ஏதேனும் பிரச்சனையா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமன்னா நெருக்கமானவரை பற்றி இந்த பதிவை போட்டுள்ளதால், ஒருவேளை தமன்னா காதலர் விஜய் வர்மாவை பிரிந்து விட்டாரா? என யூகத்தின் அடிப்படையில் பல வதந்திகள் பரவி வருகிறது. எந்த ஒரு வதந்திக்கு அதிரடியாக புற்றுப்புள்ளி வைக்கும் தமன்னா, இந்த விஷயம் குறித்தும் மௌனம் கலைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்