ஐரோப்பா

ஸ்வீடனில் பல குர்ஆன் எரிப்புகளை நடத்திய ஈராக்கியர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

ஸ்வீடனில் குரானை பல இடங்களில் தொடர்ந்து எரித்து வந்த நபரை சிலர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட துருவத்தை ஒட்டியுள்ள ஸ்வீடன், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் சிரியா, ஈராக்கில் இருந்து அகதிகளாக சென்ற மக்கள் பலரும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நாடுகளில் மத அடிப்படைவாதத்திற்கு எதிரான குரல்கள் அதிகமாக உள்ள நிலையில் அவ்வபோது மத எதிர்ப்பாளர்களுக்கும், நம்பிக்கை உள்ளவர்களுக்குமான மோதல்கள் நடக்கிறது.

ஸ்வீடனில் வாழ்ந்து வந்த ஈராக்கை சேர்ந்த சல்வான் மொமிகா என்ற ஈராக்கிய கிறிஸ்தவர், பல போராட்டங்களில் இஸ்லாமிய புனித நூலான குரானை எரிப்பதை வாடிக்கையாக செய்து கொண்டிருந்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் அவ்வாறி மசூதிக்கு வெளியே குரானை எரித்ததற்காக அவர் மீது பல இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில் அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அந்த வழக்கில் இன்று சல்வான் மொமிகாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக மர்ம நபர்கள் சிலர் மொமிகாவை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். அதனால் அவருக்கு இன்று வழங்கப்பட இருந்த தீர்ப்பு (அவர் இனவெறுப்பை தூண்டும் குற்றவாளியா? என தீர்ப்பு அளிக்க இருந்தது) பிப்ரவரி 3ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

(Visited 41 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!