ஆசியா செய்தி

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்திய மூன்று இந்தியர்கள் கைது

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஆளில்லா வானுர்தி மூலம் போதைப்பொருள் கடத்தல் செய்ததாக மூன்று இந்திய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆடவர்களை சிறப்பு படை அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டு வரும் அந்த போதைப்பொருள் பஞ்சாப் மற்றும் பல இந்திய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

ஆடவர்கள் போதைப்பொருளுக்காகச் சட்ட விரோதமாக ஹவாலா முறையில் பணப்பரிவர்த்தனையும் செய்துள்ளனர்.

பிலிப்பீன்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளது. ஆடவர்களை கைது செய்யும் போது அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!