பொழுதுபோக்கு

கீர்த்தி – ஆண்டனி காதல் கதையில் இவ்வளவு இருக்கா? யாருக்கும் தெரியாத ரகசியம்…

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை அண்மையில் மணமுடித்தார். இந்நிலையில் தனது காதல் கதையை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில்,

“ஆர்குட் சமூக வலைதளம் இருக்கும்போது அதன் வழியாக முதன் முதலில் பேச ஆரம்பித்தோம். ஒரு மாதம் பேசியிருப்போம். அதன்பிறகு ரெஸ்டாரன்ட் ஒன்றில் சந்தித்தோம்.

அப்போது நான் என்னுடைய குடும்பத்துடன் இருந்ததால் என்னால், ஆண்டனியிடம் பேச முடியவில்லை. ஆண்டனியை பார்த்து கண்ணை மட்டும் சிமிட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

அதன்பிறகு அவரிடம், ‘உனக்கு தைரியம் இருந்தால் என்னிடம் புரபோஸ் செய்’ என்று கூறினேன். கடந்த 2010-ம் ஆண்டு முதன்முறையாக அவர் என்னிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். 2016-ல் தீவிரமாக இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். அவர் எனக்கு கொடுத்த மோதிரத்தை நான் இன்றுவரை கழட்டவில்லை. அது என்னுடைய திருமணத்திலும் இருந்தது. அந்த மோதிரத்தை நீங்கள் என்னுடைய அனைத்து படங்களிலும் பார்க்கமுடியும்” என்றார்.

மேலும், “இது எங்களுக்கு ஒரு கனவு போன்றது. ஏனென்றால் வீட்டை விட்டு ஓடிப்போகலாம் என்றெல்லாம் நாங்கள் யோசித்திருக்கிறோம். இப்போது என்னுடைய மனம் நிறைந்துவிட்டது. எங்களுக்கு இது ஒரு எமோஷனலான தருணம். இதைத்தான் விரும்பினோம். அவர் என்னை விட 7 ஆண்டுகள் மூத்தவர். நான் 12வது படித்துக்கொண்டிருந்தபோது, அவர் கத்தாரில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். 6 ஆண்டுகள் தொலைவில் இருந்தே காதலித்து வந்தோம். எங்களை இணைத்தது கொரோனா காலக்கட்டம் தான்.

என்னுடைய கரியருக்கு அவர் மிகவும் ஆதரவாக இருந்தார். நான் கிடைத்ததற்கு அவர் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று யாராவது சொன்னால், நம்பாதீர்கள், அவர் கிடைப்பதற்கு தான் நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்றார்.

(Visited 27 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!