பொழுதுபோக்கு

திரிஷா வீட்டில் திடீர் மரணம்… கண்ணீருடன் போட்ட வைரல் பதிவு

சினிமாவில் பிசியாக இருக்கும் திரிஷாவுக்கு நாய்கள் என்றால் அலாதி பிரியம். இதனால் தன் வீட்டில் ஏராளமான நாய்களை வளர்த்து வருகிறார் திரிஷா.

அதில் அவரின் பேவரைட் நாயின் பெயர் ஜாரோ. இந்த நாயை கடந்த 2012-ம் ஆண்டு முதல் வளர்த்து வருகிறார் திரிஷா.

அதை நாய் என்று சொல்ல விரும்பாத திரிஷா, ஜாரோவை தன் மகனாகவே வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை நடிகை திரிஷாவின் செல்ல நாய் ஜாரோ திடீரென உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து உருக்கமாக பதிவிட்டுள்ள திரிஷா. என் மகன் ஜாரோ கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை இறந்துவிட்டான். இதன்பின் என் வாழ்க்கை அர்த்தமற்றதாக ஆகிவிட்டது என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் நானும் என் குடும்பத்தாரும் உடைந்துபோய் உள்ளோம். மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப நேரம் ஆகும் என கண்ணீர்மல்க பதிவிட்டு ஜாரோ அடக்கம் செய்தபோது எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் திரிஷா.

இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

(Visited 40 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!