இலங்கை செய்தி

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவு தொடர்பில் விளக்கம்!

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது.

சட்டமா அதிபரினால் நீதிமன்றுக்கு இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு தொடர்பில் தேசிய பெறுகைகள் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிந்துரைகளைப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஊடாக அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இன்று (18) அவர் அறியப்படுத்தியுள்ளார்.

குறித்த கடவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனுவை சவாலுக்கு உட்படுத்தி எபிக் லங்கா தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் சுமதி தர்மவர்தன குறித்த விடயம் தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!