ஐரோப்பா

ஜார்ஜியாவில் உயிரிழந்த இந்தியர்கள் : ஆணவக் கொலையாக இருக்கலாம் என சந்தேகம்!

ஜார்ஜியாவின் காகசஸ் மலைகளில் உள்ள பிரபலமான ஸ்கை ரிசார்ட்டில் உள்ள உணவகம் ஒன்றில் 12 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திபிலிசிக்கு வடக்கே சுமார் 75 மைல் தொலைவில் அமைந்துள்ள ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட ஸ்கை ரிசார்ட்டான குடாரியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜார்ஜியாவில் உள்ள உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“குடாரியில் அமைந்துள்ள இந்திய உணவகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஓய்வு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலங்கள் அங்கு பணிப்புரிந்தவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முதற்கட்ட பரிசோதனையில், உடலில் காயங்கள் அல்லது வன்முறை அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் ஆணவக் கொலையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஜார்ஜியாவின் குற்றவியல் கோட் பிரிவு 116 இன் கீழ் ஒரு விசாரணை தொடங்கப்பட்டது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!