பொழுதுபோக்கு

மீண்டும் கமலுடன் இணையும் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டன் இயக்குனர்

லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டன் இயக்குநராக இருக்கிறார். இதுவரை அவர் இயக்கிய அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தவை.

தற்போது அவர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார்.

இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் மீண்டும் கமல் ஹாசனுடன் இணைவாரா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் இதுகுறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

“நான் கமல் ஹாசனின் தீவிரமான ரசிகன். அவரை நேரில் ஒருமுறை பார்த்துவிட்டாலே போதும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவரையே இயக்குவேன் என்று நினைக்கவில்லை. அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். மீண்டும் அவருடன் இணையவிருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

அநேகமாக அந்தப் படம் விக்ரம் படத்தின் இரண்டாவது பாகமாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அதேபோல் கார்த்தியை வைத்து கைதி 2, சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட படங்களையும் அவர் அடுத்தடுத்து இயக்கவிருப்பது நினைவுகூரத்தக்கது.

கமலுடன் மீண்டும் இணையவிருப்பதாக லோகி அறிவித்திருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

(Visited 37 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!