இந்தியா

தலைநகர் டெல்லியில் பல பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு திங்கட்கிழமையன்று (டிசம்பர் 9) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

40க்கும் அதிகமான பள்ளிகளுக்கு மின்னஞ்சல்வழி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர். இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் இத்தகவல்களை வெளியிட்டன.

மதர் மேரீஸ் பள்ளி , பிரிட்டி‌ஷ் பள்ளி, சல்வான் அரசாங்கப் பள்ளி, டெல்லி அரசாங்கப் பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 7.06 மணி முதல் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அதனால் மாணவர்கள் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

“பள்ளிக் கட்டடங்களுக்குள் நான் வெடிகுண்டுகளை வைத்திருக்கிறேன். சிறிய வெடிகுண்டுகளான அவற்றை மிக நன்றாக ஒளித்து வைத்திருக்கிறேன். அவற்றால் கட்டடங்களுக்கு அதிக சேதம் இருக்காது. ஆனால், குண்டு வெடிக்கும்போது பலர் காயமடைவர். எனக்கு 30,000 டொலர் வழங்காவிட்டால் நான் குண்டுகளை வெடிக்கச் செய்வேன்,” என்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சலில் எழுதப்பட்டிருந்தது.

சில பள்ளிகளில் கூட இதுவரை சந்தேகத்துக்குரிய எதுவும் காணப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(Visited 43 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!