பொழுதுபோக்கு

நெல்சன் திலீப்குமார் பிடித்த மற்றுமொரு திமிங்கலம்… பாருங்கள்…

இந்திய அளவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார். பீஸ்ட் படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து. இதனால் நெல்சன் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அதனை ஜெயிலர் படத்தின் மூலம் தகர்த்தெறிந்து இன்று முன்னணி இயக்குனராக மாறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக ஜெயிலர் 2 உருவாகவுள்ளது.

இப்படத்திற்கான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும், ஜெயிலர் 2 உருவாகுவது என்பது உறுதி என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தான் நெல்சன் ஈடுபட்டுள்ளாராம்.

இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்திற்கு பின் இயக்குனர் நெல்சன் தெலுங்கு நடிகரான ஜூனியர் என் டி ஆர் உடன் கைகோர்க்கவுள்ளாராம் நெல்சன்.

ஏற்கனவே சில கதைகளை ஜூனியர் என் டி ஆர்-க்கு கூறியுள்ளாராம். மேலும் இந்த படத்தை தயாரிக்க இரண்டு தயாரிப்பு நிறுவனம் போட்டியிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!