பொழுதுபோக்கு

காசுக்காகத்தான் அப்படி நடித்தேன்… மனதை கலங்க வைத்த ஷகீலா

தமிழ், மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் ஷகீலா. தற்போது தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்த கொண்டபின் ஷகிலாவின் இமேஜ் மொத்தமாக மாறியது. தற்போது ஷகிலா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

நடிகை ஷகிலா யூடியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் நான் விருப்பப்பட்டு சினிமாவிற்கு வரவில்லை. குடும்ப சூழ்நிலையால் சினிமாவிற்கு வந்தேன்.

அப்பா கிளப்புக்கு சென்று பணத்தை தொலைத்துவிடுவார். இதனால், அம்மா மெஸ் வைத்து இருந்தார்கள் அதுவும் லாஸ் ஆகிவிட்டதால்,வேறு வழியே இல்லாமல் சினிமாவிற்கு வந்தேன். ஆனால், எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. என் உடலுக்கும் உயரத்திற்கும் அது சரியாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால், அது முடியாமல் போய்விட்டது.

சினிமாவிற்கு வந்த புதிதில் நல்ல கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தேன். அந்த நேரத்தில் என் குடும்பத்திற்கு பணத்தேவை அதிகமாக இருந்தது, என் அக்கா கர்ப்பமாக இருந்தார், அப்பாவும் இறந்துவிட்டதால் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு எனக்கு வந்துவிட்டது.

See also  பிரபல பாடகர் லியாம் பெய்ன் ஹோட்டல் பால்கனியில் இருந்து விழுந்து பலி

இந்த நேரத்தில் தான் மலையாளப்படத்தில் நடித்தேன். அந்த படத்தில் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டேன், தயாரிப்பாளர் ஓகே சொல்லிவிட்டதால் அந்த படத்தில் நடித்தேன். பெரிய பெரிய இயக்குநர்கள் கொடுத்த வாய்ப்பை நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இந்த மாதிரி படத்தில் நடிக்கவில்லை, என்னை நடிக்க அழைத்த படத்தில் நடித்தேன்.

வயிற்று பசிக்கு சோறு வேண்டும், எவன் குடும்பத்தையும் அழிக்கல, எவன் கழுத்தையும் அறுக்கல, என் உடம்பு இருந்தது அதை காண்பித்து நடித்து சம்பாதித்துக் கொண்டேன். இதனால், பல தயாரிப்பாளர்கள், பல தொழில்நுட்ப கலைஞர்கள் நன்றாக வாழ்ந்தார்கள் இதை நினைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக போக வேண்டியது தான்.

(Visited 3 times, 3 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content