செய்தி வாழ்வியல்

கொழுப்பை கரைக்கும் குடலை சுத்தப்படுத்தும் நெல்லிக்கனியின் மகத்துவம்

குடல் முதல் கொழுப்பு கரைப்பது வரை ஏழு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் நெல்லிக்காயின் மகத்துவம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இத்தனை நாள் நெல்லிக்காய் மகத்துவம் தெரியாமல் இருந்திருந்தீர்கள் என்றால் இன்றாவது தெரிந்து கொள்ளுங்கள். ஆயுர்வேத மூலிகையான இதற்கு பல அற்புத பலன்கள் இருக்கின்றன. ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட். காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது என்னென்ன நன்மைகளை கொடுக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.

மழை மற்றும் குளிர்காலம் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதாகும். வைட்டமின் சி நிறைந்த, நெல்லிக்காய் சாறு வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்று மற்றும் நோய்கள் ஆபத்தில் இருந்து உங்களை காக்கும்.

நீங்கள் அஜீரணம் அல்லது செரிமான ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களா? இந்த நெல்லிக்காய் ஜூஸை குடிக்கவும். நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த, நெல்லிக்காய் சாறு செரிமானத்தை சீராக்கும். வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், உங்கள் குடல் இயக்கத்தை சீராகும். மலச்சிக்கலைத் தடுக்கும்.

See also  இலங்கையில் கடந்த ஆண்டு 1,327 எய்ட்ஸ் நோயாளிகள் பதிவு

உடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்க வேண்டும் என்றால் வெறும் வயிற்றில் நெல்லிச் சாற்றை முயற்சிக்கவும். இது நச்சுகள் மற்றும் அசுத்தங்களை வெளியேற்ற உதவும். வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

உங்கள் தலைமுடி உதிர்தல் பிரச்சனை பற்றி கவலைப்படுகிறீர்களா? தினமும் காலையில் நெல்லிக்காய் சாறு குடித்தால் தலைமுடி சிறப்பாக வளரும். இந்த ஜூஸ் மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவும்.

குறைந்த கலோரி உள்ள நெல்லிக்காய் சாறு எடை இழப்பு திட்டத்தில் ஒரு சிறந்த பானம். வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்வது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்க உதவும்

(Visited 7 times, 7 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content