பொழுதுபோக்கு

நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் கொள்ளை… சிக்கியது யார் தெரியுமா?

தமிழில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கருணாகரன். இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘கலகலப்பு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இவர் தன்னுடைய மனைவி மற்றும் இரு மகள்களுடன் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஐடி துறையில் பணியாற்றி வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருடைய மனைவி வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது… பூட்டி இருந்த பீரோவை உடைத்து, சுமார் 60 சவரன் நகை திருடு போய் இருப்பது தெரியவந்தது.

எனவே உடனடியாக இதுகுறித்து சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாரும் வீட்டுக்குள் வரவில்லை என்பதையும் அவர் தன்னுடைய புகாரில் தெரிவித்திருந்தார்.

இது சம்பந்தமாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வந்த நிலையில், கருணாகரன் வீட்டில் வேலை செய்யும் , வேலை ஆட்கள், செக்யூரிட்டி உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தியபோது அவர்கள் யாரும் திருடவில்லை என கூறினர்.

See also  திடீரென வந்த விஜய்யின் மனைவி சங்கீதா; எங்கு சென்றார்?

சிசிடிவி கேமராவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரும் வந்து செல்லாதது உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் வேலை செய்யும் நபர்களின் கை ரேகை சேகரிக்கப்பட்டு போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் கருணாகரன் வீட்டில் வேலை செய்து வந்த விஜயா என்கிற பெண் தான் பீரோவை உடைத்து 60-வது சவரன் நகையை திருடினார் என்பது தெரிய வந்தது.

பக்காவாக ஸ்கெச் போட்டு யாருக்கும் சந்தேகம் வராத நிலையில் திருடி, நகையை அவர் எடுத்து சென்றிருந்தாலும் கை ரேகை இவரை காட்டி கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, இந்த திருட்டு சம்பவத்திற்கு பின்னால் யார் யாரெல்லாம் உள்ளார்கள் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த பெண் சுமார் 100 சவரனுக்கு மேல் நகை திருடி சிக்கியதை தொடர்ந்து, இதே போல் வேலைக்கார பெண் ஒருவர் நகை திருடி சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

See also  எதிர்நீச்சல் சீரியலில் ஜனனிக்கு பதிலாக கமிட் ஆகிய தொகுப்பாளனி..

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content