உலகம்

எவரெஸ்ட் மலையில் 100 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரின் சடலம் மீட்பு !

நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் மலையில் நபர் ஒருவருடைய சடலத்தை விளக்கப்படக் குழு ஒன்று கண்டெடுத்துள்ளது.
அந்தச் சடலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு எவரெஸ்ட் மலையில் மாயமான மலையேறியுடையதாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இந்தச் செய்தியை நேஷனல் ஜியாகிராஃபிக் சஞ்சிகை அக்டோபர் 11ஆம் திகதியன்று வெளியிட்டது.

பருவநிலை மாற்றம் காரணமாக இமய மலைப் பகுதிகளில் பனி உருகி வருகிறது.இதனால், எவரெஸ்ட் மலையில் உயிரிழந்த, உடல் கிடைக்காத மலையேறிகளின் சடலங்கள் தற்போது கண்களுக்குத் தட்டுப்படுவதாகக் கூறப்படுகிறது.

விளக்கப்படக் குழுவினர் கண்டெடுத்த உடல் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரு இர்வின் என்பவருடையதாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அவரது காலுறையில் ஏ.சி. இர்வின் எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.இவர், ஜார்ஜ் மெலோரி என்பவருடன் 1924ஆம் ஆண்டில் எவரெஸ்ட் மலையில் ஏறினார்.மெலோரியின் உடல் 1999ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது.இர்வின் காணாமல் போனபோது அவருக்கு 22 வயது.அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த அவரது குடும்பத்தினர் மரபணுச் சோதனை செய்துகொண்டுள்ளனர்.

எவரெஸ்ட் மலையில் மலையேறிகள் ஏறுவது 1920களில் தொடங்கியது.இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

(Visited 4 times, 4 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content