பொழுதுபோக்கு

“வேட்டையன்” பார்க்க தியேட்டருக்கு வந்த லதா ரஜினிகாந்த் – தலைவர் எப்படி இருக்கின்றார்?

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படம் சிறப்பு காட்சியுடன் தமிழகத்திலும் வெளியான நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது தன்னுடைய வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதனிடையே, இன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை அவரது குடும்பத்தினர் அனைவரும் கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் ஒட்டுமொத்தமாக சென்று பார்த்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் ரஜினிகாந்த், சில வார காலங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஆனால் வரும் 15ம் தேதி முதல் அவர் கூலி படத்தின் ஷூட்டிங்கில் மீண்டும் இணையவுள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

See also  அர்ஜுன் தாஸூக்கு இருட்டு அறையில் முரட்டு முத்தம் கொடுத்த அதிதி ஷங்கர்

தற்போது ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் வேட்டையின் படத்தை ரஜினியின் குடும்பத்தினர் அனைவரும் கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் கண்டு களித்துள்ளனர்.

லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் வேட்டையன் படத்தை திரையரங்கில் பார்க்க வந்திருந்தனர்.

இதனிடையே இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அவரது பெற்றோரும் இதே திரையரங்கில் படம் பார்க்க வந்தனர். முன்னதாக தனுஷும் இதே திரையரங்கில் படம் பார்க்க வந்திருந்தார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினியின் உடல்நலம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை அவர் பகிர்ந்துள்ளார்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content