பொழுதுபோக்கு

விதிகளை மீறினாரா விஜய்? கடைசிப் படத்திற்கு கிளம்பிய பிரச்சனை

விஜய்யின் கடைசிப் படத்திற்கு பூஜை தொடங்கும் முன்பே புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

‘கேவிஎன் புரடக்சன்ஸ்’ தயாரிப்பில் விஜய்யின் கடைசிப் படமான விஜய்69 உருவாகவுள்ளது. அவரது அரசியல் வருகைக்கும் வரும் 2026 தேர்தலுக்கு அடித்தளமான அரசியல் கதைக்களத்துடன் இப்படம் உருவாகவுள்ளதாகவும், விஜய்யை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் சமூக அக்கறை கொண்ட படமாக இப்படத்தை ஹெச்.வினோத் செதுக்கி வருவதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தின் பூஜை அக்டோபர் 4 ஆம் தேதி ஆரம்பிக்கவுள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். வரும் 5 ஆம் தேதிதான் விஜய் ஷூட்டிங்கு கிளம்புவதாகவும், இப்படத்தின் பாடல் காட்சிக்காக பையனூரில் ஷூட்டிங் செட் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இளம் ஹீரோக்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் விஜய் மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி படத்திற்கு பூஜை போட்டவர்கள்தான் இப்போது ஷூட்டிங் எடுக்க முடியும். அது நவம்பர் வரை மட்டும்தான் எடுக்க முடியும். டிசம்பரில் ஷூட்டிங் எடுக்க முடியாது.

See also  “புஷ்பா" டைரக்டர்க்கு எல்லாமே தெரியும்... குண்டை தூக்கி போட்ட ஜானி மாஸ்டர்

அதாவது ஆகஸ்ட் 15க்குப் பிறகு பூஜை போட்டவர்கள் ஷூட்டிங் போகக் கூடாது என்பதுதான் கவுன்சில் போட்ட உத்தரவு. இது இப்படியிருக்க, விஜய்69 படத்திற்கு 4 ஆம்தேதி பூஜை போட்டு, 5 ஆம் தேதி கிளம்புகிறார்கள் என்றால் விஜய் படத்திற்கு மட்டும் என்ன விதிவிலக்கா? என்று சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்னரே ஆபீஸ் பூஜை இப்படத்திற்குப் போடப்பட்டதாக கூறப்பட்டாலும், படப்பிடிப்பு நடத்தியிருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதனால் எளியவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அதனால் விஜய் படமும் கவுன்சில் விதிகளை மதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content