பொழுதுபோக்கு

வனிதா விஜயகுமாருக்கும், ராபர்ட் மாஸ்டருக்கும் திருமணம்? அதில் கூறியிருப்பது என்ன?

நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார்.

சூழல் இப்படி இருக்க ரபார்ட் மாஸ்டரும், வனிதாவும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அவர்களுக்கு திருமணமா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயகுமாரின் மகளான வனிதா சினிமாவிலிருந்து ஒதுங்கிய நிலையில், பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார்.

இது ஒருபக்கம் இருக்க வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரம் சர்ச்சைகளை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார்.

அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை காதலோடு பிடித்தபடி அமர்ந்திருக்கிறார் வனிதா விஜயகுமார்.

அதில் Save The Date October 5 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்களோ அக்டோபர் 5ஆம் தேதி என்னவாக இருக்கும். ஒருவேளை இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது என்று அறிவிக்கவிருக்கிறார்களா இல்லை அன்றைய தினமே திருமணம் செய்யவிருக்கிறார்களா என்று கேள்வி கேட்டுவருகிறார்கள்.

அதேசமயம் ராபர்ட்டும் வனிதாவும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துவருகிறார்கள். அந்தப் படம் பற்றிய அப்டேட் ஏதாவது அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகலாம். அதற்கான அறிவிப்பைத்தான் இப்படி கொடுத்திருக்கிறார்கள் என்று இன்னொரு தரப்பு ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். என்ன நடக்கவிருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(Visited 4 times, 4 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content