இலங்கை – ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் கீழ் அமைக்கப்படும் விசேட பிரிவு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணைப் பிரிவை நிறுவுவதற்கு NPP இடைக்கால அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரபல நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதி தலைமையிலான விசாரணைப் பிரிவை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த காலங்களில் நாங்கள் எழுப்பிய சில வழக்குகள் மற்றும் சமீபத்தில் வந்த வழக்குகளை நாங்கள் விசாரிப்போம்.
ற்போதுள்ள ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை NPP அரசாங்கம் உறுதி செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 39 times, 1 visits today)