ஆசியா

ஜப்பானில் பெருவெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி அறுவர் மரணம்

மத்திய ஜப்பானில் ஏற்பட்ட கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகத் தகவல் ஒன்று திங்கட்கிழமை (செப். 23) தெரிவித்தது.

எட்டுப் பேர் காணாமல் போன நிலையில் அறுவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டாலும் இன்னும் இருவரின் கதி என்னவென்று தெரியவில்லை என ஜப்பானியக் கடலோர இஷிகாவா மாநில அரசாங்கம் கூறியது.

சனிக்கிழமை முதல் பெய்த கனமழையால் இஷிகாவாவில் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. அங்குள்ள விஷிமா நகரில் 72 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையின் அளவு 540 மில்லிமீட்டர் எனப் பதிவானது.

மழை ஓய்ந்த பின்னர் 4,000 வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியதாக ஹோகுரிகு மின் விநியோக நிறுவனம் கூறியது.

நிலச்சரிவுகள் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட வட்டாரங்கள் தனித்தீவுகள் போல தொடர்பறுந்து இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த 7.5 ரிக்டர் நிலநடுக்கத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் இஷிகாவாவை வெள்ளமும் நிலச்சரிவுகளும் சீரழித்து வருகின்றன.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!