பொழுதுபோக்கு

கடற்கரையில் புது பொண்ணுடன் உல்லாசம் – பொறுமையை இழந்த மனைவி

கோலிவுட்டில் சமீபகாலமாக ஒரு டாபிக்தான் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் மீதுதான் தவறு என்று ஒருபக்கம் குரல்கள் எழ; இல்லை இல்லை அவரது மனைவி மீதுதான் தவறு என்று மறுபக்கம் சொல்ல; எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ஒரு பெண்ணுடன் நடிகருக்கு இருந்த ரகசிய உறவுதான் இவை எல்லாத்துக்கும் காரணம் என்று பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்தச் சூழலில் ஒரு கிசுகிசு கோடம்பாக்கத்தில் புதிதாக கிளம்பியிருக்கிறது.

சமீப காலமாகவே வெற்றி நடிகரை சுற்றி கிசுகிசுக்கள் கிளம்ப ஆரம்பித்தன. அதனை கேள்விப்பட்ட பலரும் ச்ச ச்ச அதெல்லாம் இருக்காது; வெற்றி நடிகரின் இமேஜை உடைப்பதற்காக வேண்டுமென்றே சிலர் கிளப்பிவிடுகிறார்கள் என்றுதான் பேசினார்கள்.

அது நாளடைவில் வளர்ந்து வளர்ந்து வெடித்தேவிட்டது. அதற்கு காரணம் நடிகரின் மனைவிதான் என்று ஒருதரப்பினர் திட்டவட்டமாக கூறிவந்தனர்.

நடிகரின் குடும்பம் கூட்டு குடும்பம்தான். ஆனால் வெற்றி நடிகரை திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண்; நடிகரை அவரது குடும்பத்திலிருந்து பிரித்து தனது அம்மா வீட்டிலேயே தங்க வைத்துவிட்டார்; மாமியார் வீட்டு கட்டுப்பாட்டில்தான் வெற்றி நடிகர் இருந்தார்.

அதனால்தான் கடந்த சில காலமாக வெற்றி நடிகருக்கு எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டாகவில்லை என்ற முணுமுணுப்புகள் கேட்க ஆரம்பித்தன.

இது ஒருபக்கம் இருக்க நடிகர் மீது மனைவிக்கு சந்தேகமும் வலுத்தது. அதன் காரணமாகத்தான் நடிகர் ஒரு அதிரடியான முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக மனைவியின் சந்தேகத்துக்கு காரணமே நடிகரின் செயல்பாடுதான் என்று இப்போது கூறுகிறார்கள்.

அதாவது ஃபேமஸான பெண் ஒருவருடன் விழா ஒன்றில் நடிகருக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் ரகசிய காதலாக மாறிவிட்டதாம். மனைவியின் சந்தேகம், மாமியார் வீட்டு கட்டுப்பாடு என நடிகர் டிப்ரெஸனில் அந்தப் பெண்ணுடன் அளவுக்கு அதிகமாகவே பழக ஆரம்பித்தாராம் நடிகர்.

அதன் காரணமாக மனைவியிடம் அவுட்டோர் ஷூட்டிங் செல்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு; கடற்கரையோர ரெசார்ட்டாக பார்த்து நடிகரும், அந்தப் பெண்ணும் ரூம் புக் செய்வார்களாம். ஒருகட்டத்தில் வெளியே செல்ல சோம்பேறிப்பட்டு சென்னையிலேயே ரூம் புக் செய்ய அங்கிருப்பவர்கள் நடிகரின் மனைவிக்கு தந்தி அடித்துவிட்டார்களாம்.

அதிலிருந்து மனைவியார் நடிகர் மீது உச்சக்கட்ட சந்தேகம் அடைய ஆரம்பித்தாராம். ஒருமுறை நடிகருக்கே தெரியாமல் ஆள் வைத்து அவரை ஃபாலோ செய்ய சொன்ன மனைவிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்ததாம்.

அதாவது யாருமில்லாத ஒரு மாலை நேரத்தில் கடற்கரை மணலில் அந்தப் பெண்ணுடன் நடிகர் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பது தெரியவந்ததாம். இருந்தாலும் கணவரை பிரிய மனம் இல்லாததால் முடிந்தளவு கட்டுக்குள் வைத்து வாழ்க்கையை நகர்த்தலாம் என்ற நினைப்பில் இருந்தபோது; அந்தப் பெண் மீது மோக போதை முற்றியதால் நடிகர் ஒரு விபரீத முடிவு எடுத்துவிட்டாராம். இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த அந்த நடிகரின் மனைவி விரைவில் தனது கணவரின் முகத்திரையை கிழிக்கும் விதமாக பல ஆதாரங்களை வெளியிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content