ஆஸ்திரேலியா

மெல்பர்னில் 2வது நாளாக போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இரண்டாவது நாளாகப் போர் எதிர்ப்பு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

செப்டம்பர் 12ஆம் திகதியன்று மெல்பர்னில் நடைபெற்ற தற்காப்புக் கண்காட்சிக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர்.

செப்டம்பர் 11ஆம் திகதியன்று நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.அதில் காவல்துறை அதிகாரிகள் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், தற்காப்புக் கண்காட்சி நடைபெறும் இடத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நெருங்க முடியாதபடி புதிய தடுப்புகள் போடப்பட்டன.கலவரத் தடுப்பு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.பாதுகாப்புப் பணிகளுக்காக விக்டோரியா மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் மெல்பர்னுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

செப்டம்பர் 11ஆம் திகதி நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினர்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், புட்டிகள், குதிரைச் சாணம் போன்றவற்றை எறிந்தனர்.ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் மிருதுவான கையெறி குண்டுகளையும் வெட்டொளிச் சாதனங்களையும் உடலில் எரிச்சலை ஏற்படுத்தும் திரவத்தையும் பயன்படுத்தினர்.

செப்டம்பர் 11ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 1,500 ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.இதில் மொத்தம் 22 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

(Visited 37 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!