உலகம் செய்தி

வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார்

வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் எட்மண்டோ கோன்சால்வ்ஸ் நாட்டை விட்டு வெளியேறி ஸ்பெயினில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெனிசுலாவின் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் நடைபெற்ற வெனிசுலா அதிபர் தேர்தல் முடிவுகள் பொய்யானவை என்றும், தேர்தலில் தான் வெற்றி பெற்றதாகவும் எட்மண்டோ கோன்சால்வ்ஸ் அரசு மீது குற்றம் சாட்டினார்.

ஆனால் அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தேர்தல் கவுன்சில் அறிவித்தது.

அதன்படி, அரசு மீது அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, கோன்சால்வ்ஸை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிபர் தேர்தலுக்குப் பிறகு, வெனிசுலாவில் அரசியல் நெருக்கடி உருவாகி, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல லத்தீன் அமெரிக்க நாடுகள் அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்துள்ளன.

இதன்படி பிரேசில், கொலம்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளுடனான வெனிசுலாவின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content