இலங்கை செய்தி

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் எடுப்பு

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி இன்றையதினம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடுவது மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற அழைப்புக்களை ஏற்பதா இல்லையா என்பதை ஒருமித்து முடிவெடுப்பது, வடகிழக்கில் தேர்தல் பிரச்சாரங்களை முழு வீச்சில் முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் எடுக்கப்பட்ட இத்தீர்மானங்கள் அனைத்தையும் தேர்தல் காலம் முடியும் வரையில் அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற வடகிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அதன் பிரதிநிதிகள் சிவில் சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!