September 18, 2025
Follow Us
இந்தியா செய்தி

ஆந்திரப் பிரதேசத்தில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பலி

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளியில் உள்ள எசியன்டியா என்ற மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மதிய உணவு இடைவெளியின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் விபத்து நடந்ததை பலர் கவனிக்கவில்லை.

இதுபற்றி அனகாப்பள்ளி காவல் கண்காணிப்பாளர் தீபிகா பாட்டீல், அணுஉலையில் வெடிப்பு நிகழ்ந்ததாகவும், விபத்துக்கான காரணம் என்ன என்று இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“இந்த தொழிற்சாலை இரண்டு ஷிப்டுகளில் 381 ஊழியர்களுடன் செயல்படுகிறது. மதிய உணவு இடைவேளையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எனவே, ஊழியர்கள் வருகை குறைவாகவே இருந்தது” என அனகாப்பள்ளி மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

“இந்த விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவருபவர்களைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ நாரா லோகேஷ் கூறியுள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி