மத்திய கிழக்கு

ஈரான் விமான நிலையத்தில் ஏற்பட்ட விபரீதம் – இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட நபர் மரணம்

ஈரானின் விமான நிலையத்தில் விமான இயந்திரத்துக்குள் ஊழியர் ஒருவர் இழுக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

Chabahar Konarak விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த Varesh Airline விமானத்தை அவர் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

JACDEC எனும் விமானப் பாதுகாப்பு நிறுவனம் அந்தச் சம்பவம் குறித்த தகவலை வெளியிட்டது. அந்த ஊழியர் போயிங் 737-500 ரக விமானத்தின் பாதுகாப்புப் பகுதியில் ஒரு கருவியை விட்டுச் சென்றதை உணர்ந்தார்.

அதை எடுப்பதற்காகத் திரும்பச் சென்றபோது இயங்கிக் கொண்டிருந்த இயந்திரத்தால் அவர் உள்ளே இழுக்கப்பட்டார்.

அந்தப் பாதுகாப்புப் பகுதிக்குள் யாரும் உள்ளே செல்வதைத் தடுக்கத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்ற ஊழியர் இழுக்கப்பட்டதும், இயந்திரம் தீப்பற்றிக்கொண்டது.

ஊழியரின் உடல் பின்னர் மீட்கப்பட்டது. ஈரானின் விமானப் போக்குவரத்து ஆணையம் சம்பவம் குறித்து விசாரிக்கிறது.

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!