இலங்கை

இலங்கையில் வெடிகுண்டு அச்சுறுத்தலால் நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு: ஒருவர் கைது

வெடிகுண்டு பீதி காரணமாக கண்டி நீதிமன்ற வளாகத்தில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான (119) அநாமதேய அழைப்பை அடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அழைப்பின் பேரில், இலங்கை இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு, இலங்கை காவல்துறையுடன் இணைந்து நீதிமன்ற வளாகத்திற்குள் விரிவான பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பித்தது.

அதன்படி, இன்று விசாரணைக்கு வரவிருந்த அனைத்து வழக்குகளும் ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அவசர இலக்கமான 119 ற்கு தொலைபேசி அழைப்பு விடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அழைப்பு விடுக்கப்பட்ட சிம் அட்டையின் உரிமையாளர் கினிகத்தேன – கடவல பகுதியில் வைத்து கைதானதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், நேற்றுமுதல் தமது தொலைபேசி காணாமல் போயுள்ளதாக 53 வயதுடைய குறித்த சந்தேகநபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஹட்டன் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content