செய்தி வட அமெரிக்கா

கறுப்பின பயணிகளை வெளியேற்றிய அமெரிக்க விமான சேவை – விமானிகளுக்கு நேர்ந்த கதி

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கறுப்பினப் பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகளிடம் இருந்து துர்நாற்றம் வருவதாக கூறி இவ்வாறு பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவ்வாறு செய்த விமானிகள் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்

ஜனவரி 5ஆம் திகதி இடம்பெற்ற அந்தச் சம்பவம் தொடர்பில் 3 பயணிகள் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர்.

மூவரும் கறுப்பின நபர்களாகும். விமானத்தில் அவர்கள் ஒன்றாக அமரவில்லை; அவர்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாது.

Phoenix நியூயார்க் நகருக்குச் செல்லவிருந்த விமானத்திலிருந்து அனைத்துக் கறுப்பின நபர்களும் வெளியேற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மொத்தம் 8 நபர்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பாகுபாடாக நடந்துகொள்கிறது என்ற அடிப்படையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த மூவருக்கும் அதே விமானத்தில் அதே இருக்கைகளில் அமர அனுமதி தரப்பட்டது.

நடந்த சம்பவத்துக்கு வருந்துவதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் இஸோம் (Robert Isom) கூறினார். கறுப்பினத்தவரின் பயண அனுபவத்தைக் கவனித்துக்கொள்ளும் சிறப்புக் குழுவை அமைக்கப் போவதாக அவர் கூறினார்.

ஏற்கனவே 2017ல் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தவிர்த்துவிடுங்கள், அது கறுப்பினத்தவரை மரியாதைக் குறைவாக நடத்துகிறது என்று சில சமூக உரிமைக் குழுக்கள் ஆலோசனை கூறியிருந்தன.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!