கட்டுநாயக்க விமான நிலையத்தில் அரசியல்வாதி ஒருவர் கைது!
வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் இலங்கை வந்த அரசியல்வாதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சக்திவாய்ந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரைக் கைது செய்யும் போது, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் அவரிடம் இருந்து கிட்டத்தட்ட 6,000 சிகரெட்களைக் கண்டுபிடித்தனர்.
இதன் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபா என மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 10 times, 1 visits today)





