இலங்கையில் எரிபொருள் நுகர்வு 50% குறைவு: எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்
நாட்டில் எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பாவனை குறைவதற்கு நாட்டின் பொருளாதார நிலைமையும் ஒரு காரணம் என அதன் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் அனைத்து வகையான எரிபொருள்களும் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(Visited 25 times, 1 visits today)





