ஆசியா

நியூசிலாந்தில் இடம்பெற்ற கார் விபத்தில் மலேசிய மாணவர்கள் பலி!

நியூசிலாந்தில் இடம்பெற்ற கார் விபத்தில் இரு மலேசிய மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூசிலாந்தின் – டெகாபோ ஏரிக்கு அருகில் குறித்த ஐவரையும் மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மூன்று மாணவர்களும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தில் உள்ள அதன் உயர் ஸ்தானிகராலயம் மூலம், கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கும் என்று மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அன்வார் இப்ராகிம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிராத்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content