ஐரோப்பா

சுத்தியலால் தாக்கி லண்டனில் உள்ள நகைகள் கடையில் கோடிக்கணக்கான நகை கொள்ளை : மக்களின் கவனத்திற்கு!

லண்டனில் உள்ள நகைக் கடையொன்றின் பணியாளர்கள் கொள்ளை கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளையடிப்பவர்கள் பணியாளர்களை சுத்தியலால் தாக்கி காயப்படுத்தி கொள்ளையடித்து சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை நண்பகலில் செல்சியாவில் உள்ள சிட்னி தெருவில் உள்ள கடைக்குள் முகமூடி அணிந்த இருவர் மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கவுண்டர்களை அடித்து நொறுக்கியதுடன், நபர் ஒருவரின் தலையில் தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பழங்கால நகைகளில் நிபுணத்துவம் பெற்ற போர்பன்-ஹான்பி என்ற கடையில் இந்த கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!