இந்தியா செய்தி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அசத்தல் வெற்றி

ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சஹா 4 ரன்னில் வெளியேறினார். சாய் சுதர்சன் 20 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்னிலும் அவுட்டாகினர்.

பொறுப்புடன் ஆடிய ஷுப்மன் கில் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் மனோஹர் அதிரடியாக ஆடி 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 27 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 30 பந்தில் 46 ரன்னில் அவுட்டானார். இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை சேர்த்தது.

ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

இந்த ஆட்டத்தின் இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!