வட அமெரிக்கா

அமெரிக்காவில் திடீரென வீடுகளுக்குள் புகுந்து மர்மநபர் சரமாரி கத்திக்குத்து! – நால்வர் பலி

அமெரிக்காவின் இல்லி னாய்ஸ் மாகாணம் ராக்போர்ட் பகுதியில் மர்மநபர் ஒருவர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்தது விரைந்து சென்ற பொலிஸார், கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டனர். எனினும் இந்த தாக்குதலில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேவேளை சம்பவத்தில் பலியானவர்கள், 15 வயது சிறுமி, ஒரு பெண், இரண்டு ஆண்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களது பெயர் விவரங்களை வெளியிடவில்லை. இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான இந்த வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறையுள்ளார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!