இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

இலங்கையில் இன்று (28.02) நாளை (29.02) மற்றும் நாளை மறுதினம் (01.03) அதிக வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் பாடசாலை மாணவர்கள் வெளியில் தங்குவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, எந்தவொரு பாடசாலையிலும் பயிலும் மாணவர்கள் அதிக வெப்பநிலையின் போது வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் அல்லது விளையாட்டு நிகழ்வுகள் அல்லது வேறு எந்த வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு மாகாண மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!