ஆசியா

பிலிப்பைன்ஸில் எடை அதிகரித்ததால் கவிழ்ந்த படகு – 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு பயணிகள் படகு பயணம் மேற்கொண்டது. படகில் 70 பயணிகள் பயணித்தனர். ஏரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்துள்ளது.

இதனால், பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கத்தில் குவிந்துள்ளனர். இதனால், ஒரு பக்கத்தில் எடை அதிகரித்ததால் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் அனைவரும் ஏரியில் மூழ்கினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 42 பேர் பயணிக்கக்கூடிய படகில் 70 பேர் பயணித்ததும், பயணிகள் யாரும் உயிர்காக்கும் கவச உடை (லைப் ஜாக்கெட்) அணியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!