இலங்கை செய்தி

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார வழங்கிய வாக்குறுதி

  • September 23, 2024
  • 0 Comments

அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்துள்ளார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது. இதன் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் […]

ஆஸ்திரேலியா செய்தி

செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி வழங்கிய ஆஸ்திரேலிய விமான நிறுவனம்

  • September 23, 2024
  • 0 Comments

விர்ஜின் ஆஸ்திரேலியா ஏர்லைன்ஸ் நிறுவனம் செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு செல்ல பயணிகளை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் தொடக்கமாக, மெல்போர்ன் மற்றும் சிட்னி இடையேயான விமானங்களில் சிறிய செல்ல நாய்கள் மற்றும் பூனைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், விலங்குகள் பயணிகளின் முன் இருக்கைக்கு அடியில் வைக்கக்கூடிய கொள்கலனில் இருந்தால் மட்டுமே விமானத்தில் அனுமதிக்கப்படுகின்றன. இந்த விதிகள் சிறிய நாய்கள் மற்றும் பூனைகளுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் ஒரு மிருகத்தை எடுத்துச் செல்வதற்கு […]

செய்தி விளையாட்டு

நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் – இலங்கை அணி அபார வெற்றி

  • September 23, 2024
  • 0 Comments

காலியில் இடம்பெற்ற நியுசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெறுவதற்கு 274 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 211 ஓட்டங்களிற்கு தனது இரண்டாவது இனிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 208 ஓட்டங்களிற்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த நியுசிலாந்து அணி 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ரச்சின் ரவீந்திர 92 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பிரபாத் ஜெயசூரிய ஐந்து விக்கெட்களை […]

செய்தி

2028ஆம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

  • September 23, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றால் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் திகதி நடக்கவுள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணையதிபர் கமலா ஹாரிஸும் குடியரசுக் கட்சியின் சார்பில் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். எதிர்வரும் தேர்தலில் தோல்வி கண்டால் 2028ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடுவீர்களா என்று டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு வாய்ப்பு இல்லை […]

இலங்கை

இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றார்

  • September 23, 2024
  • 0 Comments

9வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேறுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். அனுரகுமார திஸாநாயக்க பெலவத்தையில் உள்ள அலுவலகத்தில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தேசிய மக்கள் கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத்தந்துள்ளனர்..  

இலங்கை

இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து கூறிய இந்திய பிரதமர்

  • September 23, 2024
  • 0 Comments

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி x கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்த புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் எமது மக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் நாம் செயற்பட முடியும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு – பதவி விலகுவதாகப் பிரதமர் அறிவிப்பு

  • September 23, 2024
  • 0 Comments

இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமது பதவியிலிருந்து விலகுவதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் 47 (2) ஆம் பிரிவிக்கமைய, தாம் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக தினேஷ் குணவர்தன அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை செய்தி

நம்பிக்கைக்குரியவர்களுக்கு முதலிடம் வழங்கும் இலங்கை ஜனாதிபதி – பதவி விலகும் அமைச்சரவை

  • September 23, 2024
  • 0 Comments

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய பிரதமர் மற்றும் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் முழுமையான அமைச்சரவை அமைச்சர்களும் இன்று அமைச்சர் பதவியை விட்டு விலகவுள்ளனர். எவ்வாறாயினும், புதிய ஜனாதிபதி தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர் அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரியவர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, தற்போது அமைச்சுப் பதவிகளில் கடமையாற்றும் அமைச்சர்களும் அவரது தனிப்பட்ட ஊழியர்களும் வெளியேறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

2050 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயம்

  • September 23, 2024
  • 0 Comments

உலக சுகாதார அமைப்பின் புதிய ஆய்வில், antimicrobial resistance நோய் காரணமாக 2050 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் இதை உலக பொது சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாக அறிமுகப்படுத்தியுள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் உலகளவில் இந்த நோய்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரிக்கும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 2025 முதல் 2050 வரை, உலகளவில் 39 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் நேரடியாக […]

ஆசியா

தைவானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த சீனர்கள்

  • September 23, 2024
  • 0 Comments

ஜூன் மாதத்தில் இருந்து 23 சீனர்கள் தைவானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். அவர்களில் இருவர் தப்பிச் சென்றுள்ளனர் என்று தைவானின் கடல் விவகார கவுன்சில் அமைச்சர் குவான் பி-லின் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்ததாக தைவான் செய்திகள் தெரிவிக்கின்றன. கடலோர காவல்படை நிர்வாகத்தை மேற்பார்வையிடும் அமைச்சர் குவான், முறையான ஆவணங்கள் இல்லாமல் தைவானுக்கு சீன பிரஜைகள் வந்ததாக நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. தைவான் கடலோர காவல்படை இந்த இரண்டு சம்பவங்களிலும் 21 பேரை கைது செய்தது, மற்ற இரண்டு […]

error: Content is protected !!