இந்தியா

வேலைக்கு சென்ற தொழிலாளியை துரத்தி துரத்தி அடித்துக் கொன்ற யானை!

  • March 23, 2024
  • 0 Comments

குடகு மாவட்டத்தில் கோபி தோட்டத்துக்கு இன்று வேலைக்குச் சென்ற தொழிலாளியை காட்டு யானை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், குடகு பகுதியில் திரியும் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதி, தோட்டங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்து வருகின்றன. குடகு மாவட்டத்தில் யானைகள் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன், விராஜ்பேட்டை தாலுகா செனங்கி அருகே உள்ள அப்பூர் கிராமத்தில் கோபி தோட்டத்தில் வேலை செய்து […]

இலங்கை

கனடாவில் இருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர்!

  • March 23, 2024
  • 0 Comments

கனடாவிற்கு புலம் பெயர்ந்து செல்லும் பலர் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனேடிய அட்லாண்டிக் பேர் ஆண்டில் குடியேறிகளின் எண்ணிக்கை 6000 மாக காணப்பட்டதாகவும், 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 32000 மாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்கும் குடியேறிகளில் 50 வீதமானவர்கள் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் தாக்குப் பிடிக்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் வீடமைப்பு, மருத்துவ சேவை, கல்வி வசதி, பாடசாலை வசதி போன்ற சில காரணிகளினால் குடியேறிகள் […]

ஐரோப்பா

விமர்சனங்களை எழுப்பியுள்ள அதிபர் மேக்ரானின் குத்துச்சண்டை புகைப்படங்கள்..

  • March 23, 2024
  • 0 Comments

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் குத்துச்சண்டை செய்வது போன்ற சில புகைப்படங்களை அவரது அதிகாரப்பூர்வ புகைப்பட கலைஞர் சோசிக் டி லா மொய்சோனியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு படத்தில் மேக்ரான் உறுதியான முகபாவத்தில் பற்களை கடித்து கொண்டிருப்பது போன்றும், மற்றொரு படத்தில் அவர் குத்துசண்டையில் கவனம் செலுத்துவதையும் காணமுடிகிறது. சமீப காலமாக மேக்ரான் ரஷ்யாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் […]

இலங்கை

வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து வெளியான அறிவிப்பு!

  • March 23, 2024
  • 0 Comments

வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினருக்கு சட்ட நடவடிக்கை இன்றி நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டம் மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திரு.லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இதன்படி விபத்து நடந்த ஓராண்டுக்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்து அதிகபட்ச இழப்பீடு தொகையாக  5 இலட்சம் ரூபாயை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனைக் குறிப்பிட்டார். […]

இந்தியா

தன் தோலினால் செய்த காலணிகளை தன் தாய்க்கு பரிசாக அளித்த மத்திய பிரதேச இளைஞன்!!

  • March 23, 2024
  • 0 Comments

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி சாந்தி பானி நகரை சேர்ந்தவர் ரவுனக் குர்ஜார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை ரவுடிகள் பட்டியலில் பொலிஸார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவர் தனது சொந்த தோலில் இருந்து செய்யப்பட்ட காலணிகளை தனது தாய்க்கு பரிசாக வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. ரவுனக் குர்ஜார் ஒரு முறை பொலிஸாரால் சுட்டு பிடிக்கப்பட்டவர் ஆவார். அப்போது அவரது தொடைப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில், அதில் தோல் அகற்றப்பட்டது. அந்த தோலை செருப்பு தொழிலாளியிடம் […]

இலங்கை

புத்தளம் – விபத்தில் பெண்ணொருவர் பலி மூவர் வைத்திசாலையில் அனுமதி!

  • March 23, 2024
  • 0 Comments

புத்தளம் – கொட்டுக்கச்சிய , கல்லகுளம் பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடுவ, வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.குசுமலதா மல்காந்தி (43) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார் என புத்தளம் தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர். புத்தளம் தள வைத்தியசாலையில் […]

இலங்கை செய்தி

இலங்கை தேர்தல்! ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – பசில் அறிவிப்பு

  • March 23, 2024
  • 0 Comments

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், குறித்த கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இணையத்தில் அச்சுறுத்தலாக மாறும் புதிய ஆபத்து – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

  • March 23, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இணையம் ஊடாக இடம்பெறும் துஷ்பிரயோகங்களில் இருந்து இளம் தலைமுறையினரை பாதுகாப்பது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இணைய வசதியுள்ள சாதனங்கள் மூலம் குழந்தைகள் ஒன்லைன் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதால், சைபர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு குயின்ஸ்லாந்து பொலிஸார் பெற்றோரை வலியுறுத்தியுள்ளனர். ஒரு கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒருவர், பெற்றோரின் மேற்பார்வையின்றி தங்கள் படுக்கையறையில் இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்த முடியும் என்று தெரியவந்துள்ளது. துப்பறியும் கான்ஸ்டபிள் கிறிஸ் டூஹே […]

பொழுதுபோக்கு

25 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பிரபு தேவா- ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி

  • March 23, 2024
  • 0 Comments

25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா மற்றும் ஏ.ஆர் ரகுமான் இணையும் திரைப்படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூப்பர் கூட்டணியின் புதிய படத்தை முதன் முதலாக ‘பிகைண்ட்வுட்ஸ்’ சார்பில் மனோஜ் தயாரித்து, இயக்க உள்ளார். இப்படத்தில் இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளன. காமெடி நடிகர் யோகி பாபு இதில் வித்யாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

Apple நிறுவனம் மீது வழங்கு தாக்கல் செய்த அமெரிக்கா!

  • March 23, 2024
  • 0 Comments

Apple நிறுவனம் மீது அமெரிக்காவின் நீதித் துறையும் 15 மாநிலங்களும் அதன் மீது வழக்குத் தொடுத்துள்ளன. Apple நிறுவனம் கையடக்க தொலைபேசி சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நியூ ஜெர்சியில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், Apple கையடக்க தொலைபேசிசந்தையில் அதிகாரத்தைக் கொண்டுள்ளது மற்றும் ஐபோன் மீதான கட்டுப்பாட்டை பரந்த, நீடித்த மற்றும் சட்டவிரோத நடத்தையில் ஈடுபட பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. iPhone கையடக்க தொலைபேசிகளை விற்பனை […]

error: Content is protected !!