தமிழ்நாடு

சட்டைப்பையில் வெடித்து சிதறிய செல்போன்… பைக்கில் சென்ற மூவர் படுகாயம்!

  • March 28, 2024
  • 0 Comments

கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரின் சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்து சிதறிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர், சோதனை பாளையம் பகுதியில் நடைபெறுகிற சுப நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோரும் அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென […]

இலங்கை

கொழும்பில் டயர் கடையொன்றில் பாரிய தீ விபத்து

கொழும்பு ஆர்மர் வீதியில் அமைந்துள்ள டயர் கடை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைக்க கொழும்பு மாநகர சபையில் இருந்து பல தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் தற்போது தெரியவில்லை.

இலங்கை

கேப்பாபிலவு மக்கள் காணி விடுவிப்பு: இராணுவ உயர் அதிகாரியுடன் மக்கள் சந்திப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்களுக்கு சொந்தமான 56 குடும்பங்களின் 59.5 ஏக்கர் காணியினை விடுவிக்க கோரி போராட்டங்கள் முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று (27) தங்கள் காணிகளை விடுவிக்க கோரி கேப்பாபிலவு மக்கள் கேப்பாபிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்கள். நேறையதினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட இலங்கை இராணுவ தளபதியிடம் தங்கள் கோரிக்கையினை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்து கேப்பாபிலவு படைத்தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பினை வெளிப்படுத்தி நின்றவேளை இராணுவத்தளபதியினை சந்திக்க போராட்ட மக்களுக்கு சந்தர்ப்பம் […]

உலகம்

பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பு : விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்!

  • March 28, 2024
  • 0 Comments

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி குறையும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே கணித்து வருகின்றனர். ஒரு வினாடியில் ஒரு பகுதியே இருந்தாலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இலங்கை

முல்லைத்தீவில் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு!

  • March 28, 2024
  • 0 Comments

தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் தேசிய நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் சமூக நல செயற்றிட்டமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் இன்று (28.03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் விநியோகக் குழாயினை பாவனைக்காக திறந்து வைத்ததுடன் புதிய நீர் விநியோகக் குழாய் பதிப்பு நிர்மாண வேலையையும் இராஜாங்க அமைச்சர் […]

இலங்கை

இலங்கையில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் : வஜிர அபேவர்தன

அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு

ஐயோ… விஜய் மகன் எடுத்திருக்கும் கதை இதுதானா? தயவு செய்து இத எடுக்காதீங்க சஞ்சய்

  • March 28, 2024
  • 0 Comments

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வெளியானதோடு சரி; அதற்கு பிறகு அந்தப் படம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தச் சூழலில் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் படத்தின் கதை இதுதான் என்ற புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஜேசன் சஞ்சய் படம் இயக்கப்போகிறார் என்று அறிவிப்பு வெளியானாலும் யார் அதில் ஹீரோவாக நடிப்பார் என்று தெரியாமல் இருக்கிறது. விஜய் சேதுபதி, விக்ரம் மகன் துருவ், கவின் உள்ளிட்டோரில் யாரேனும் ஒருவர் ஹீரோவாக […]

ஆசியா

மலேசியாவில் டிக்டொக் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • March 28, 2024
  • 0 Comments

மலேசியாவின் நிதி அமைச்சகம் TikTok பயனர்களை ஒரு போலி இணையதளத்தில் தனிப்பட்ட விவரங்களைப் பகிர ஊக்குவிக்கும் ரமலான் பணக் கையேட்டை ஊக்குவிக்கும் மோசடி இடுகைகளுக்கு விழ வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மலேசியாவின் சில பகுதிகளில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள் இஸ்லாமியர்களின் புனித மாதத்தில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு உதவும் வகையில் மானியம் வழங்குகின்றனர். இதனை பயன்படுத்தி இடம்பெறுகின்ற மோசடி நிகழ்வுகள் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக போலி வலைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட […]

இந்தியா

மியன்மாருடனான எல்லைப் பகுதியில் வேலி அமைக்கும் இந்தியா!

  • March 28, 2024
  • 0 Comments

மியான்மர் உடனான தனது எல்லையை பாதுகாக்க இந்தியா 1,610-கிமீ வேலியமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 3.7 பில்லியன் செலவழிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, குறித்த வேலி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அதன் வடகிழக்கு பிராந்தியத்தின் மக்கள்தொகை கட்டமைப்பைப் பராமரிக்கவும், எல்லைக் குடிமக்களுக்கு ஆட்சி கவிழ்க்கப்பட்ட மியான்மருடன் பல தசாப்தங்களாக விசா இல்லாத இயக்கக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும் […]

ஆசியா

ஆப்கானில் இன்று 4.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

  • March 28, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.44 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது 169 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

error: Content is protected !!