சட்டைப்பையில் வெடித்து சிதறிய செல்போன்… பைக்கில் சென்ற மூவர் படுகாயம்!
கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரின் சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்து சிதறிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர், சோதனை பாளையம் பகுதியில் நடைபெறுகிற சுப நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோரும் அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென […]













