இலங்கை செய்தி

11 கிலோ தங்கத்தை ஜெல் வடிவில் கடத்த முற்பட்ட நால்வர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும்,  விமான நிலைய பாதுகாப்பு  பிரிவினர் மற்றும் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து 11 கிலோ தங்கத்தை  ஜெல் வடிவில் ஆக்கப்பட்டு பார்சல்களில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாடு ஒன்றிலிருந்து வந்த பயணி ஒருவர் இந்த தங்க கையிருப்பை  பயணிகள் பரிமாற்று பகுதியில் உள்ள  குறித்த வரியில்லாத வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரிடம்  கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த முகாமையாளர் அதனை நாட்டுக்குள்  கடத்திச் செல்ல  முற்பட்டபோது கைது செய்யப்பட்டார்.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!