செய்தி வட அமெரிக்கா

மனைவி மற்றும் மகன் கொடூர கொலை:700 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொள்ளவுள்ள அமெரிக்கர்!

அமெரிக்காவில் தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்ததுடன், நிதிக் குற்றங்களில் ஈடுபட்ட நபருக்கு கூடுதலாக 700 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.

தென் கரோலினாவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் முர்டாக் (52). இவர் கடந்த 2021ம் ஆண்டு தனது மனைவி மேகி மற்றும் மகன் பால் ஆகியோரை கொன்றதால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அவரது தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மேகி, பால் ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அப்போது கொலைகளை தாம் செய்யவில்லை என கடுமையாக மறுத்தார்.எனினும், ஒரு டஜன் வாடிக்கையாளர்களிடம் இருந்தும், அவரது சட்ட நிறுவனத்திடம் இருந்தும் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.

அலெக்ஸ்

இரட்டைக் கொலைக்கான தண்டனை பின்னர் வழங்கப்படும் என நீதிபதி கூறிய நிலையில், அலெக்ஸ் 30 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அவர் சுமார் 99 நிதிக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு கூடுதலாக 700 ஆண்டுகள் சிறை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content