அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

UAE இல் சமூக ஊடகத் தடை : அரபு நாடுகளில் இதுவே முதல்முறை

ஐக்கிய  அரபு அமீரகம் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகத்  தளங்களை  அணுகுவதற்கான வயதெல்லையை  15 ஆக நிர்ணயித்துள்ளது.

இதன் மூலம், இத்தகைய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தும் முதல் அரபு நாடாக UAE திகழ்கிறது.

இது தொடர்பான சட்டவரைபு இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்குவது, பயன்படுத்துவது அல்லது இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தடையின் காரணமாக, அவர்களால் உள்ளடக்கத்தைப் பதிவிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ, பகிரவோ அல்லது பொதுக் குழுக்களில் சேரவோ முடியாது என்று அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 15 மற்றும் 16 வயதுடைய இளம் பருவத்தினர், வயதுக்கு ஏற்ற உள்ளடக்கக் கட்டுப்பாடுகள், அறிமுகமில்லாத பயனர்களை தொடர்பு கொள்வதற்கான  கட்டுப்பாடுகள், திரை நேர மேலாண்மைக் கருவிகள் மற்றும் பெற்றோர் மேற்பார்வை அம்சங்கள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புகளுக்கு உட்பட்டு சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த விதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் அனைத்து சமூக ஊடகத் தளங்களுக்கும் பொருந்தும்.

மேலும், டிஜிட்டல் அடையாளச் சரிபார்ப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆதரவு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வலுவான வயது சரிபார்ப்பு நடவடிக்கைகளை நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தளங்கள் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் உருவாக்கப்பட்ட கணக்குகளை முடக்க வேண்டும், பயனர்கள் வயது சரிபார்ப்பு முறைகளைத் தவிர்ப்பதைத் தடுக்க வேண்டும்.

அத்துடன் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களுக்காகவோ அல்லது நடத்தை விவரங்களைச் சேகரிப்பதற்காகவோ குழந்தைகளின் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என சட்டத்திருத்ததில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி