Site icon Tamil News

பாம்புகளை மறைத்து விமானத்தில் சென்னை வரைகொண்டு வந்த பெண்

இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரின் லக்கேஜில் 22 வகையான பாம்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து சென்னை வந்த பெண் பயணி ஒருவரின் பயணப்பொதிகளை சோதனையிட்ட போது இந்த பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் இந்த பாம்புகளை பல பிளாஸ்டிக் கொள்கலன்களில் சேமித்து வைத்து இவ்வாறு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண் இந்திய சுங்க மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version