பொழுதுபோக்கு

திருமணம் குறித்த செய்தியை அறிவித்த வெற்றி வசந்த் – வைஷ்ணவி… அட இவங்களா??

வெற்றி வசந்த்துக்கும், வைஷ்ணவிக்கும் இரு வீட்டுப் பெற்றோர்கள், பெரியவர்கள் முன்னிலையில் விரைவில் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சிம்பிளாக நடைபெறவிருக்கிறது.

முதல் தொடரிலேயே தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். ‘முத்து’ என்கிற கதாபாத்திரத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தனது இயல்பான நடிப்பினால் இந்தக் கதாபாத்திரத்திற்கு அத்தனை உயிரோட்டம் கொடுத்திருக்கிறார் வெற்றி.

‘ராஜா ராணி 2’வில் தனது எதார்த்தமான நடிப்பினால் கவனிக்க வைத்தவர் வைஷ்ணவி சுந்தர். கேரக்டர் ரோலில் நடித்துக் கொண்டிருந்தவர் ‘பொன்னி’ தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இந்நிலையில் வெற்றி வசந்த்துக்கும், வைஷ்ணவிக்கும் இரு வீட்டு பெற்றோர்கள், பெரியவர்கள் முன்னிலையில் இந்த வாரம் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சிம்பிளாக நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து சின்னத்திரை படைகள் சூழ திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

திருமணம் என்கிற புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் இவர்கள் இருவரும் அவர்களுடைய புதிய பயணம் குறித்து அவர்களுடைய ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார்கள். இருவரும் இதுகுறித்து அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

See also  உடனடியாக விஜய் சேதுபதிக்கு phone போட்டார் கமலஹாசன்...
(Visited 3 times, 3 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content