உலகம் செய்தி

இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறியது ஈரான் தூதுக்குழு!

  • April 12, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் இருந்து தாயகம் நோக்கி புறப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்த நிலையிலேயே அவர்கள் சென்றுள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28-ம் திகதி முதல் போர் நடைபெற்று வந்தது. பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் கடந்த 8 ஆம் திகதி இருவாரகால போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான அமைதி பேச்சு […]

இலங்கை செய்தி

இலங்கை விஜயத்தின்போத வடக்கு, கிழக்கு செல்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!

  • April 12, 2026
  • 0 Comments

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரு நாள் பயணமாக எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை வருகின்றார். இவ்விஜயத்தின்போது அவர் வடக்கு, கிழக்குக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு திட்டங்களைப் பார்வையிடவுள்ளார். முல்லைத்தீவு, தெனியாய மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவமனைத் திட்டங்கள் உள்ளிட்ட இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் அவர் பார்வையிடுவார் என்று வெளிவிவகார வெளிவிவகார அமைச்சர் […]

இலங்கை செய்தி

விபத்தில் கணவன் பலி: மனைவி படுகாயம்! திருமலையில் சோகம்!!

  • April 11, 2026
  • 0 Comments

திருகோணமலை, நாமல்வத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் பலியாகியுள்ளார். மனைவி படுகாயம் அடைந்துள்ளார். இவ்விபத்து இன்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. மொரவெவ பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கர வண்டி, நாமல்வத்த பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்த ஆர்.ஜீ. சுனில் ரத்ன பண்டார (50வயது) என்பவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மனைவி கே யூ. அனுஷ்கா (46 வயது) படுகாயம் […]

உலகம் செய்தி

ஈரானின் முக்கிய தலைவரின் குடும்ப உறுப்பினர்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானின் பெண்கள் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைவர் மாசூமே எப்தேக்கரின் Masoumeh Ebtekar உறவினர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ Marco Rubio ரத்து செய்துள்ளார். இதற்கமைய எப்தேக்கரின் மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் அமெரிக்காவில் வசிக்கும் தகுதியை இழந்து நாடுகடத்தப்படுவதற்காகக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். ஈரானியப் பிரமுகர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவில் தங்குவதற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, […]

உலகம் செய்தி

24 மணி நேரத்துக்குள் ஹிஸ்புல்லா அமைப்பின் 200 இலக்குகள்மீது தாக்குதல்!

  • April 11, 2026
  • 0 Comments

லெபனானில் ஒரே நாளில் ஹிஸ்புல்லா அமைப்பின் 200 இலக்குகள்மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் தரைப்படை நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், ஏவுகணைத் தளங்களை அழிக்கும் நோக்கோடும் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல்களில் தெற்கு லெபனானில் ஆறு பேர் பலியாகியுள்ளனர் எனவும், ஐவர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சில், லெபனானில் முன்னெடுக்கப்பட்டுவரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அமைதி பேச்சு நடைபெறும் நாளில் […]

உலகம் செய்தி

ஈரான், அமெரிக்கா அமைதி பேச்சு ஆரம்பம்!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில்  ஆரம்பமாகியுள்ளது. ஈரான் அரச ஊடகம் மற்றும் சர்வதேச ஊடங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடனேயே மேற்படி பேச்சு ஆரம்பமாகியுள்ளது. அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினரும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட தூதுக்குழுவினரும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28-ம் திகதி […]

இலங்கை செய்தி

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகள் 17 ஆம் திகதி அளவீடு!

  • April 11, 2026
  • 0 Comments

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் 17 ஆம் திகதி நில அளவீடுகள் முன்னெடுக்கப்படும் என்று கடற்தொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தையிட்டி திஸ்ஸ விகாரை […]

உலகம் செய்தி

இஸ்லாமாபாத் அமைதி பேச்சு தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?

  • April 11, 2026
  • 0 Comments

அமெரிக்காவானது தனது வெளியுறவுக் கொள்கையில் இஸ்ரேலை விட சொந்த நாட்டு நலன்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஈரானின் முதலாவது துணை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெறும் அமைதி பேச்சின் வெற்றி, அமெரிக்காவின் முடிவிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலவேளை அமெரிக்கா இஸ்ரேலின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும். அவ்வாறு நடந்தால் ஈரான் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெப்போதையும் விட தீவிரப்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவார கால போர் […]

உலகம் செய்தி

ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குகிறது சீனா?

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குவதற்கு சீனா தயாராகிவருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. ஆயுத பரிமாற்றத்தில் தாம் பங்கேற்கவில்லை என்ற விம்பத்தை ஏற்படுத்துவதற்காக சில நட்பு நாடுகள் ஊடாக அவற்றை கையளிப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இக்காலப்பகுதியை பயன்படுத்தி தனது ஆயுத இருப்பைப் புதுப்பித்துக் கொள்ள ஈரான் முனையக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், […]

இந்தியா தமிழ்நாடு

‘ஜனநாயகன்’ வெளியானது அரசியல் சதி!

  • April 11, 2026
  • 0 Comments

‘ஜனநாயகன்’ படத்தை இரகிசயாக வெளியிட வைத்து வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது என தமிழக பா.ஜ.க. விமர்சித்துள்ளது. படம் வெளியானமை தொடர்பில் சி.பி.ஐ. விசாரணை கோர விஜய் தயாரா என சவாலும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதால் 500 கோடி ரூபாவுக்கு மேல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி, மக்களை ஏமாற்றி அனுதாப […]

error: Content is protected !!