சபாநாயகர் பதவி விலக வேண்டும்: எதிரணி வலியுறுத்து!
சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன Jagath Wickramaratne பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் S.M. Marikar இந்த வலியுறுத்தலை விடுத்தார். “இலங்கை அரசியல் வரலாற்றில் சிறப்பாக செயல்பட்ட சபாநாயகர்கள் உள்ளனர். எனினும், தற்போதைய சபாநாயகர் படு மோசமாக நடந்துகொள்கின்றார். ஆளுங்கட்சிக்கு சார்பாகவே செயல்படுகின்றார். சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் பிரதி […]













