அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல்: பிரதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி!

  • February 14, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் Sundaralingam Pradeep தெரிவித்தார். தேர்தலை இழுத்தடிப்பு செய்யும் எந்தவொரு நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை எனவும், சட்டரீதியிலான ஏற்பாடுகள் முடிந்த பின்னர் அது நடக்கும் எனவும் அவர் கூறினார். மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு எதிரணிகள் அரசாங்கத்துக்கு சவால் விடுத்துவருகின்றன. மக்கள் மத்தியில் தமக்குரிய செல்வாக்கு சரிந்துள்ளதால் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது எனவும் எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்நிலையிலேயே பிரதி அமைச்சர் Sundaralingam Pradeep மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

செய்தி

இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

  • February 14, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் 23 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து England அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. Eden Gardens மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து Scotland அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 155 ஓட்டங்களைப் பெற்று, 5 […]

செய்தி

புறாக்கள் உயிரோடு எரிப்பு: நெடுந்தீவில் கொடூரம்!

  • February 14, 2026
  • 0 Comments

இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்திவரப்பட்டு, நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. பொலிஸாரைக் கண்டதும் அச்சம் காரணமாக உரிமையாளர்களால் இந்த கொடூரச் செயல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர், இந்தியாவிலிருந்து 144 புறாக்கள் கடல் மார்க்கமாக நெடுந்தீவுக்குக் கடத்தி வரப்பட்டுள்ளன. அங்கிருந்து பகுதி பகுதியாக யாழ்ப்பாணத்திற்குப் புறாக்களைக் கடத்தத் திட்டமிட்டிருந்தனர். நேற்று முதற்கட்டமாக 44 புறாக்களைக் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது, கடற்படையினர் அவற்றை வழிமறித்து மூவரைக் கைது செய்தனர். […]

இலங்கை செய்தி

14 வருடங்களுக்கு பிறகு விசேட கூட்டம்: கொழும்பில் நாளை அணிதிரளும் சட்டத்தரணிகள்!

  • February 14, 2026
  • 0 Comments

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டமொன்று நாளை (15) மாலை 3 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள பின்புலத்திலேயே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களையும் கொழும்பு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகே இவ்வாறானதொரு விசேட கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல் சம்பவத்தை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் […]

இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: விசாரணை வேட்டை தீவிரம்!

  • February 14, 2026
  • 0 Comments

தென்னிலங்கையில் சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை வேட்டை இடம்பெற்றுவருகின்றது. இதற்காக 10 விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) மாலை 5 மணியளவிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது. அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து, காரில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த குற்றச் செயலை புரிந்துள்ளனர். ஜீப் வாகனத்தின் இருந்த சட்டத்தரணியையும் அவரது மனைவிமீதும் துப்பாக்கிச்சூடு […]

இலங்கை செய்தி

உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து!

  • February 14, 2026
  • 0 Comments

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச் சலுகையைத் தொடர்வதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை சரியான நேரத்தில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம்–இலங்கை கூட்டு ஆணையம் 27வது அமர்வு கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றபோது இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது. ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தின் கீழ் உள்ள 27 முக்கிய சர்வதேச உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதில் தமது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவற்றின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு காலமுறைப்படி […]

அரசியல் இலங்கை செய்தி

அறகலயவுக்கு ராஜபக்சக்களே ஆரம்பபுள்ளி வைப்பு!

  • February 14, 2026
  • 0 Comments

அமைதியாக நடந்த அறகலயமீது தாக்குதல் நடத்தி குழப்பம் ஏற்படுவதற்கு ராஜபக்ச தரப்பே ஆரம்பபுள்ளி வைத்தது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க Wasantha Samarasinghe தெரிவித்தார். “ அமைதியாக நடைபெற்ற போராட்டம்மீது ராஜபக்ச தரப்பு தாக்குதல் நடத்தியதாலேயே அறகலய வெடித்தது. எனவே, குழப்பம் ஏற்பட்ட பின்னர் நடந்த சம்பவங்களைபோன்ற, அதற்கு முன்னர் இடம்பெற்றவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும். எவரேனும் குற்றம் இழைத்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கும். அது தொடர்பில் பிரச்சினை இருந்தால் மேன்முறையீடு செய்யலாம். நீதிமன்றத்தில் இருக்கும் […]

இந்தியா

டெல்லியுடன் உறவை வலுப்படுத்த டாக்கா பச்சைக்கொடி!

  • February 14, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பங்களாதேஷ் தேசியவாத கட்சி Bangladesh Nationalist Party நன்றி தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் தேர்தல் முடிவுகளை அங்கீகரித்ததற்காகவும், தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகமே தேர்தலில் வென்ற கட்சி இவ்வாறு நன்றி கூறியுள்ளது. பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 299 இடங்களில், பங்களாதேஷ் தேசியவாத கட்சி BNP தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு Tariq Rahman வாழ்த்துகள் […]

செய்தி

ICC World Cup: இன்று நடைபெறும் மும்முனைச் சமர்!

  • February 14, 2026
  • 0 Comments

ICC World Cup தொடரில் இன்று (17 ) மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. Colombo (SSC) மைதானத்தில் நடைபெறும் 22 ஆவது லீக் ஆட்டத்தில் Ireland மற்றும் Oman அணிகள் மோதுகின்றன. தங்களின் பிரிவில் முன்னிலைப் பெற இரு அணிகளும் வெற்றியை கட்டாயமாக குறிவைத்து களமிறங்குகின்றன. கொல்கத்தா Eden Gardens இல் நடைபெறும் அடுத்த 23 ஆவது லீக் ஆட்டத்தில் England மற்றும் Scotland அணிகள் பலத்த சவாலை ஏற்படுத்துகின்றன. அனுபவம் வாய்ந்த இங்கிலாந்தை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவை உலுக்கியுள்ள சம்பவம்: சுயாதீன விசாரணை கோரும் அமைப்புகள்!

  • February 14, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஜனாதிபதியின் Isaac Herzog வருகைக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் போராட்டக்காரர்களை காவல்துறை அப்புறப்படுத்திய சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் Anthony Albanese தனது கவலையை வெளிப்படுத்தியதுடன், சம்பவம் குறித்து காவல்துறை தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை மக்களுக்கு இருந்தாலும், காவல்துறையின் ஆலோசனைகளை ஏற்பாட்டாளர்கள் பின்பற்றாதது […]

error: Content is protected !!