உலகம் செய்தி

ஈரானில் பாடசாலைமீது தாக்குதல்: ஐ.நாவில் 27 ஆம் திகதி விவாதம்!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரானிலுள்ள பாடசாலைமீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் UN Human Rights Council எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) விவாதம் நடைபெறவுள்ளது. மேற்படி தாக்குதலில் 168 சிறார்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய இந்தத் கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பில் விவாதிக்குமாறு ஈரான், சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையிலேயே இந்த அவசரக் கூட்டம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடைபெறுகிறது. போர் […]

உலகம் செய்தி

‘போர் நிறுத்தம்’ – பாகிஸ்தானின் முயற்சிக்கு சீனா ஆதரவு!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பாகிஸ்தான் விடுத்துள்ள பேச்சுவார்த்தை அழைப்புக்கு சீனா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், போரை நிறுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்கும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம் எனச் சீனா வலியுறுத்துகிறது. அமைதியை நிலைநாட்டவும் உரையாடல்களை மீண்டும் […]

உலகம் செய்தி

ஈரானில் தேடுதல் வேட்டை: 39 பேர் கைது!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரானிய உளவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 39 நபர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் நடத்திய இந்த சோதனையில் ஏழு ஸ்டார்லிங்க் இணைய சாதனங்கள், கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் நிலவும் தொடர்ச்சியான இணைய முடக்கத்திற்கு மத்தியில், சட்டவிரோத தகவல் தொடர்புகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. பிடிபட்டவர்களிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டாக்களும் மற்ற ராணுவத் தளவாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  

ஆஸ்திரேலியா

வட்டி விகிதம் அதிகரிப்பு: ஆஸ்திரேலியாவில் 14 லட்சம் பேருக்கு நிதி நெருக்கடி!

  • March 25, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அண்மையில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களால் சுமார் 14 லட்சம் பேர் வீட்டுக் கடன் தவணைகளைச் செலுத்த முடியாமல் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி மேலும் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்பதால், இந்தத் துயரம் இன்னும் மோசமடையலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் 9 லட்சம் ஆஸ்திரேலியர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ராய் மோர்கன் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கிறது. மத்திய கிழக்கு […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடன் ஈரான் ரகசிய பேச்சு?

  • March 25, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் எவ்வித நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் Reza Amiri Moghadam இன்று (25) அறிவித்தார். ஈரானுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே ஈரான் தூதவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போதைய போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர நட்பு நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டாலும், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்கத் தரப்புடன் நேரடியாகப் பேசவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார். ஈரான் மற்றும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் Work From Home முறைமையை மேம்படுத்த திட்டம்!

  • March 25, 2026
  • 0 Comments

அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம் நேற்று (24) பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் Dr. Harini Amarasooriya தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத் தடையின்றி வழங்குவது குறித்தும், அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பொதுநிர்வாகம் , சுகாதாரம், கல்வி மற்றும் நீதி ஆகிய அமைச்சுகளின் […]

உலகம் செய்தி

ஈரானுடன் பேச்சு: ட்ரம்ப், நெதன்யாகு கூட்டாக களத்தில்!

  • March 25, 2026
  • 0 Comments

டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் இணைந்து ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கையாளுவதாக இஸ்ரேலிய அமைச்சர் Nir Barkat தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் முரண்பாடுகள் தென்பட்டாலும், இரு தலைவர்களும் ஒருமித்த நோக்கத்துடன் இந்த விவகாரத்தை அணுகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான எந்தவொரு ஒப்பந்தமும் அந்த நாட்டின் அணுசக்தி மற்றும் ராணுவத் திறன்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் முதன்மை இலக்காகும் என அவர் மேலும் குறிப்பிட்டார். அதேவேளை, பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், […]

விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி T-20 தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

  • March 25, 2026
  • 0 Comments

நியூசிலாந்து New Zealand மற்றும் தென்னாபிரிக்கா South Africa அணிகளுக்கிடையிலான கடைசி T – 20 போட்டியில் வெற்றிபெற்று, தொடரை 3-2 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்கா அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஏற்கனவே 4 போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 2-2 கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இன்று (25) 5-வது T20 போட்டி Hagley Oval மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய […]

உலகம் செய்தி

தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: மத்திய கிழக்கு விரைகிறது விசேட படைப்பிரிவு!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரானுடன் சமரசப் பேச்சு நடக்கின்றது என டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், அமெரிக்கா தனது வான் படையின் 82வது படைப்பரிவைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப தயாராகிவருகின்றது. மத்திய கிழக்கில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய நகர்வு அமெரிக்காவின் ராணுவ இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக ட்ரம்ப் கூறினாலும், ஈரான் தரப்பு அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. முக்கியமான நிலப்பரப்புகளைக் கைப்பற்றும் […]

இலங்கை செய்தி

யாழ்.பல்கலை புதிய துணைவேந்தர் பதவியேற்பு!

  • March 25, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி புதன்கிழமை (25) பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். பதவி ஏற்பு நிகழ்வில், முன்னாள் துணைவேந்தர் எஸ், சிறிசற்குணராசா , பதிவாளர் காண்டீபன் , பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!