இலங்கை செய்தி

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் பலி: மலையகத்தில் தொடரும் சோகம்!

  • January 12, 2026
  • 0 Comments

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். நுவரெலியா மாவட்டம் Nuwara Eliya , நானுஓயா Nanu Oya கிரிமிட்டி பகுதியிலேயே இன்று (12) இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக் கூட்டை கழுகு தாக்கிய நிலையில், கலைந்து வந்த குளவிகள் குறித்த பெண்ணை தாக்கியுள்ளன. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 78 வயதான நடராஜா லெட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தியா தமிழ்நாடு

சி.ஐ.பி. விசாரணைக்காக டெல்லி பறந்தார் விஜய்!

  • January 12, 2026
  • 0 Comments

சி.ஐ.பி. CIB விசாரணையை எதிர்கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம்மூலம் டொல்லி நோக்கி பயணமானார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுமாறு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இந்திய நேரப்படி இன்று முற்பகல் 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் முன்னிலையாவார். டெல்லி […]

ஆஸ்திரேலியா

மெல்பேர்னில் முஸ்லிம் சமூகத் தலைவருக்கு மிரட்டல்: விசாரணை தீவிரம்!

  • January 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் தென்கிழக்கு பகுதியில் இஸ்லாமிய சமூகத் தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இச்சம்;;பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் சமூகத் தலைவரும், அவரது மனைவியும் வாகனமொன்றில் பயணித்துக்கொண்டிருக்கையில், மற்றுமொரு வாகனத்தில் வந்த குழுவொன்று அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது. வாகனத்தை வழிமறித்து கீழ் இறக்கி, முஸ்லிம் விரோத சொற்பிரயோகங்கள் செய்யப்பட்டன என்று பாதிக்கப்பட்ட தம்பதியினர் தெரிவித்தனர். தமது காரை அந்த […]

இந்தியா

நாளை சி.ஐ.பியில் முன்னிலையாகிறார் விஜய்!

  • January 11, 2026
  • 0 Comments

கரூர் பெருந்துயர் சம்பவம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு Vijay, பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக அவர் நாளை டெல்லி செல்கின்றார். சி.பி.ஐ. CBI விசாரணைக்காக நாளை (12) காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் விஜய் பயணமாகின்றார். முற்பகல் 11 மணியளவில் சி.ஐ.பி. அலுவலகத்தில் விஜய் முன்னிலையாவார் என தெரியவருகின்றது. அத்துடன், டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூரில் […]

அரசியல் இலங்கை செய்தி

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை!

  • January 8, 2026
  • 0 Comments

“ ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. நீதியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.” இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 17 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க Ravi Karunanayake சபையில் இன்று (08)கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். “ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் […]

இலங்கை செய்தி

சாரா ஜஸ்மின் எங்கே?

  • January 7, 2026
  • 0 Comments

புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மின் இந்தியாவில் இருக்கின்றார் என்பது தொடர்பில் எமக்கு எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ சாரா ஜஸ்மின் உயிரிழந்துவிட்டார் எனக் கூறப்பட்டாலும் அதனை நம்ப முடியாது. அவர் தப்பி சென்றிருக்கக்கூடும். அவர் இந்தியாவில் இருக்கின்றார் என தற்போதைய ஆட்சியாளர்கள் கூறி இருந்தனர். பாதாள குழு […]

இலங்கை செய்தி

வீட்டை கொளுத்திய தந்தை: 13 வயது மகள் பலி! மேலும் நால்வருக்கு எரிகாயம்!

  • January 6, 2026
  • 0 Comments

update வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார். ……………. முதலாம் இணைப்பு வீட்டை கொளுத்திய நபரும், அவரது 13 வயது மகளும் பரிதாபகரமாக உயிரிழந்த துயர் சம்பவமொன்று அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் நபரின் மனைவி , மாமியார், மகன், மகள் ஆகியோரும் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது மூன்று பிள்ளைகளுடன் மனைவி அவரது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை  […]

அரசியல் இலங்கை செய்தி

மஹிந்தவின் சகா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது: பின்னணி என்ன?

  • January 5, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ Johnston Fernando இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் FCID அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று எப்.சி.ஐ.டிக்கு ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ வரவழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு லொறி உள்ளிட்ட வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜொன்ஸ்டர் […]

அரசியல் இலங்கை செய்தி

முழு குடும்பத்தையும் சிறையில் அடைக்க முயற்சி: FCID யில் ஆஜர் ஆக முன் ஜொன்ஸ்டன் கதறல்!

  • January 5, 2026
  • 0 Comments

“ நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது குடும்பத்தை சிறை வைப்பதற்குரிய அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே இது.” – என்று முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ Johnston Fernando தெரிவித்தார். எப்.பி.ஐ.டி FCID எனப்படும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) முன்னிலையாவதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “வாக்குமூலம் பெறுவதற்கு வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமையவே சிஐடி வந்தேன். நேற்றுதான் அறிவித்தல் கிடைக்கப்பெற்று வந்தது. இதற்கு முன்னர் அறிவித்தல் […]

அரசியல் இலங்கை செய்தி

ஆங்கில பாடபுத்தகத்தில் முறையற்ற குறிப்பு: பின்னணியில் ராஜபக்சக்களா?

  • January 2, 2026
  • 0 Comments

“தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இந்த விடயம் எவ்வாறு நடந்தது என்பது பற்றி விசாரணை அவசியம். கல்வி அமைச்சின் செயலாளர் சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த புத்தகத்தை எதிரணியா அச்சிட்டது? சிலவேளை, ராஜபக்சக்கள்தான் […]

error: Content is protected !!