ஆசியா

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டின் முன் ஒன்றுக்கூடிய மக்கள்!

நூற்றுக்கணக்கான தென் கொரியர்கள், உறைபனிக்கு மத்தியில் முன்னாள் தென்கொரிய ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகே ஒன்றுக்கூடியுள்ளனர்.

யூன் சுக் யோலை வெளியேற்றவும் கைது செய்யவும் அழைப்பு விடுத்தனர்.

ஜனாதிபதி பாதுகாப்பு சேவையின் பணியாளர்கள் வாயிலுக்கு அருகாமையிலும், யூனின் குடியிருப்புக்கு செல்லும் மலைப்பகுதிகளிலும் முள்வேலிகளை நிறுவுவதைக் காண முடிந்தது, இது மற்றொரு தடுப்பு முயற்சிக்கான தயாரிப்பாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக யூனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் அதனை நிறைவேற்றுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரிகள் குழு யூனின் வீட்டை முற்றுகையிட்டது.

ஆனால் ஜனாதிபதி பாதுகாப்பு சேவையுடன் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு பதட்டமான மோதலுக்குப் பிறகு சியோலில் உள்ள அவரது இல்லத்திலிருந்து பின்வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்