இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் ஜெய்சங்கர் இலங்கை முன்னாள் ஜனாதிபதி இடையே சந்திப்பு!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/New-Project-1-24-1280x700.jpg)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 8ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டுறவை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பில் அவர்கள் கவனம் செலுத்தினர்.
கடல்சார் கூட்டாண்மை மாநாட்டிற்காக தற்போது ஓமானில் உள்ள விக்கிரமசிங்க, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பான முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண உள்ளார்.
(Visited 1 times, 1 visits today)